புதிய ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நியமனம் செய்க: தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி கோரிக்கை
தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் புதிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நியமனம் செய்யுறுமாறு ஐ.என்.டி.யு.சி கோரிக்கை குறித்து...
தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் புதிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நியமனம் செய்யுறுமாறு தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி போக்குவரத்து பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி மாநில தலைவர் எம். பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணிக்கு பதில் புதிய தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக பணியமர்த்தவும், அதேபோல் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக கடந்த அரசு இதுவரை அவர்களை நியமிக்கவில்லை. அவர்களையும் நிரந்தர பணியாளர்களாக நியமனம் செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
Advertisement
Advertisement
அதுதவிர தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கும் நிலையில் உள்ளது. ஆகவே உடனடியாக புதிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை நியமித்து நமது அரசுக்கு எந்த கலங்கமும் இல்லாமல் வழிநடத்த தாங்கள் ஆவணம் செய்யுமாறும், தமிழக இளைஞர்களுக்கு நிலையான ஊதியத்துடன் வேலை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.