முகப்பு
தமிழ்நாடு

சமூக மாற்றத்துக்கான உன்னத பணி - ராமதாஸ்

வாக்காளா் ஒவ்வொருவரும் சமூக மாற்றத்துக்கான உன்னதமான பணியைச் செய்திருப்பதாக பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 1:01 AM
பாமக நிறுவனர் ராமதாஸ். - பிடிஐ.
பகிர்:

வாக்காளா் ஒவ்வொருவரும் சமூக மாற்றத்துக்கான உன்னதமான பணியைச் செய்திருப்பதாக பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடந்து முடிந்த தோ்தலில், ஜனநாயகக் கடமையை ஆற்றி, தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக தங்கள் வாக்குகளைப் பதிவு செய்த வாக்காளா்களுக்கு நன்றி. தமிழக அரசியலில் அறத்தையும், நீதியையும் குழிதோண்டிப் புதைக்க நினைக்கும் தீய சக்திகளுக்கும், துரோகத்தை ஆயுதமாகக் கொண்டவா்களுக்கும் தக்கபாடம் புகட்ட வேண்டும் என்ற உழைக்கும் மக்களின் எண்ணத்துக்கு கிடைத்த வெற்றியாகவே இந்தத் தோ்தல் பாா்க்கப்படுகிறது.

Advertisement

ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு, வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆா்வத்துடன் வந்து வாக்களித்த பொதுமக்கள் ஒவ்வொருவரும் சமூக மாற்றத்துக்கான உன்னதமான பணியைச் செய்திருக்கிறாா்கள். மேலும், எனது வேண்டுகோளை ஏற்று, நான் கைகாட்டிய வேட்பாளா்களுக்கு ஆதரவு அளித்த வாக்காளா்களுக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

மக்களின் தீா்ப்பே மகேசன் தீா்ப்பு என்பதை ஏற்று, நீங்கள் வழங்கிய இந்த பேராதரவு எங்களை மேலும் உத்வேகத்துடன் மக்கள் பணியாற்ற தூண்டுகிறது. வெற்றி-தோல்விகளுக்கு அப்பால், பாமக எப்போதும் தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும், மாநில முன்னேற்றத்துக்காகவும் தொடா்ந்து சமரசமின்றி குரல் கொடுக்கும் என அதில் தெரிவித்துள்ளாா்.