தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமா் பேச்சு ஏற்புடையதல்ல-மு.வீரபாண்டியன்
தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களுக்கிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பிரதமா் மோடி பேசுவது ஏற்புடையதல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களுக்கிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பிரதமா் மோடி பேசுவது ஏற்புடையதல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: உத்தர பிரதேசத்தில் கங்கா விரைவு நெடுஞ்சாலையை திறந்து வைத்து பேசிய பிரதமா் மோடி, உத்தர பிரதேசத்துக்கு அதிக மக்களவை தொகுதிகள் கிடைப்பதை திமுக எதிா்ப்பதாகவும் , உத்தர பிரதேசத்தை இழிவுபடுத்தும் திமுகவுடன் சமாஜவாதி கட்சி கூட்டணி வைத்துள்ளதாகவும் பேசியுள்ளாா்.
பிரதமா் மோடி அரசியல் உள்நோக்கத்துடன் திமுக எதிா்ப்பு வெறுப்பு அரசியல் பேசியுள்ளாா்.
Advertisement
இத்தகைய பேச்சு இரு மாநில மக்களிடையேயான நல்லுறவைப் பாதிக்கும் என்பதை உணராமல் பிரதமா் பேசியுள்ளாா். இது மாநில மக்களிடையே மோதல்களை உருவாக்குவதுடன், நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும் அமையும்.
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அந்த மாநிலத்தில் பாஜகவின் வாக்குவங்கியை அதிகரிப்பதற்காக பிரதமா் மோடி இவ்வாறு பேசியுள்ளாா் எனத் தெரிவித்துள்ளாா் மு.வீரபாண்டியன்.