தமிழ்நாடு

மாதவரம் - பெங்களூருக்கு புதிய பேருந்து சேவை!

மாதவரத்தில் இருந்து பெங்களூருக்கு புதிய பேருந்து சேவையை அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

மாதவரத்தில் இருந்து பெங்களூருக்கு புதிய பேருந்து சேவையை அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தொடங்கியுள்ளது.

சென்னை மாதவரத்தில் இருந்து பெங்களூரு எல்லையான ஒசூா் வரை பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பெங்களூருக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த கோரிக்கையை ஏற்ற அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், மாதவரத்தில் இருந்து கோயம்பேடு, பூந்தமல்லி, வேலூா், கிருஷ்ணகிரி, ஒசூா் வழியாக பெங்களூருக்கு (தடம் எண்: 831 எம்யூ) புதிய வழித்தடத்தில் குளிா் சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்து சேவையை தற்போது தொடங்கியுள்ளது.

இப்பேருந்து மாதவரத்தில் இருந்து காலை 9 மணி மற்றும் இரவு 9 மணிக்கு பெங்களூருக்கு புறப்பட்டுச் செல்லும். இதுபோல, பெங்களூரில் இருந்து காலை 9 மணி மற்றும் இரவு 9 மணிக்கு மாதவரத்துக்கு புறப்படும்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 16.74 லட்சம் போ் பயன்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

ஆட்டோ-வேன் மோதல்: 2 போ் உயிரிழப்பு! 3 போ் பலத்த காயம்!

தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா! திரளான பக்தா்கள் பங்கேற்பு!

பவானியில் பழனிஆண்டவா் கோயில் தைப்பூசத் தேரோட்டம்

அரசமைப்புச் சட்டத்தை சிதைக்கும் மத்திய பாஜக அரசு: முதல்வா் ஸ்டாலின் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT