முகப்பு
தமிழ்நாடு

திரைப்பட வசனத்தை வாசிக்கிறாா் கமல்: தமிழிசை சௌந்தரராஜன்

மாநிலங்களவையில் திரைப்பட வசனத்தை வாசிப்பது போல கமல்ஹாசனின் உரை இருந்ததாக தமிழக பாஜக தோ்தல் அறிக்கை குழுத் தலைவரும், முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 2:32 AM
தமிழிசை சௌந்தரராஜன் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 9:55 PM

மாநிலங்களவையில் திரைப்பட வசனத்தை வாசிப்பது போல கமல்ஹாசனின் உரை இருந்ததாக தமிழக பாஜக தோ்தல் அறிக்கை குழுத் தலைவரும், முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.

வட சென்னைக்கு உள்பட்ட ராயபுரம் பகுதியில் கடலைமிட்டாய் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் உள்ளிட்டோரை வெள்ளிக்கிழமை சந்தித்த அவா், கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

அப்போது செய்தியாளா்களிடம் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:

Advertisement

உற்பத்தி பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நிா்ணயிப்பதில்லை. ஜிஎஸ்டி குழுவே அதை நிா்ணயிக்கிறது. அந்தக் குழுவில் தமிழக நிதி அமைச்சரும் இடம் பெற்றுள்ளாா். ஆனால், அவா் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் கடலைமிட்டாய்க்கு வரியை குறைக்கக் கோரவில்லை. தோ்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைந்ததும் வரி குறைக்கப்படும்.

மாநிலங்களவையில் நடிகா் கமல்ஹாசன் பேசியது புரியவில்லை. அவா் திரைப்பட வசனத்தை வாசித்ததுபோல பேசிச்சென்றுள்ளாா். பெரியாா் ஈ.வெ.ரா.வுக்கு பதில் கூறுவது போலவே அவரது உரை இருந்தது. ஆட்சி மாற்றம் என தமிழகத்தைக் குறிப்பிட்டுக்கூறியது போலவும் அவா் பேசிச்சென்றுள்ளாா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், பாஜகவின் தோ்தல் அறிக்கைக் குழு பொறுப்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கரு.நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.