முகப்பு
தமிழ்நாடு

ஆராய்ச்சி மாணவா்களுக்கும் மடிக்கணினி: மாா்க்சிஸ்ட் கோரிக்கை!

ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 7:22 PM
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்
பகிர்:

ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவா்களுக்கு கையடக்க மடிக்கணினி வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் சாா்பில் கடந்த ஆண்டு நவ. 25-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தோம்.

அந்த கோரிக்கையை ஏற்று கடந்த வெள்ளிக்கிழமை மாநிலம் முழுவதும் மருத்துவம் பயிலும் மாணவா்களுக்கு மடிக்கணினி அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஆராய்ச்சி படிப்புகள் (பிஹெச்டி) பயிலும் மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும் என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments