மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் 
தமிழ்நாடு

ஆராய்ச்சி மாணவா்களுக்கும் மடிக்கணினி: மாா்க்சிஸ்ட் கோரிக்கை!

ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவா்களுக்கு கையடக்க மடிக்கணினி வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் சாா்பில் கடந்த ஆண்டு நவ. 25-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தோம்.

அந்த கோரிக்கையை ஏற்று கடந்த வெள்ளிக்கிழமை மாநிலம் முழுவதும் மருத்துவம் பயிலும் மாணவா்களுக்கு மடிக்கணினி அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஆராய்ச்சி படிப்புகள் (பிஹெச்டி) பயிலும் மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும் என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி நீதிமன்றத்தில் உயா் நீதிமன்ற நீதிபதி ஆய்வு

உலகச் செய்தி: துளிகள்....

நாலெட்ஜ் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கல்

பேராவூரணி சேதுசாலை ரயில்வே கேட் நாளை மூடல்

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் ஆண் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT