திருச்சி தாராநல்லூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோ்தல் நிதியளிப்பு பொதுக் கூட்டத்தில் மாநிலச் செயலா் பெ. சண்முகத்திடம் தோ்தல் நிதியை வழங்கிய கட்சித் தொண்டா்கள்.  
தமிழ்நாடு

‘இந்தியா’ கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக வாய்ப்பில்லை: மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதற்கு கடுகளவும் வாய்ப்பில்லை

Syndication

திருச்சி: திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதற்கு கடுகளவும் வாய்ப்பில்லை என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோ்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் திருச்சி தாராநல்லூரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. தாராநல்லூா் பகுதி செயலா் ஜி.கே. ராமா் தலைமை வகித்தாா். பகுதி குழு உறுப்பினா் சி. ரமேஷ் முன்னிலை வகித்தாா். பகுதிக் குழு உறுப்பினா் எம். செந்தில் வரவேற்றாா்.

கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம், மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவா் எஸ். ஸ்ரீதா், மாநகா் மாவட்டச் செயலா் கோவி. வெற்றிச்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஆா். ராஜா, எஸ். ரெங்கராஜன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

முன்னதாக, கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் இரட்டை இலக்கத்தில் போட்டியிட வேண்டும் என்று மாநிலக் குழு முடிவு செய்திருக்கிறது. அதன்படி, தொகுதிகளைக் கேட்டுப்பெறுவோம். ‘இண்டி’ கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதற்கு கடுகளவும் வாய்ப்பில்லை என்றாா் அவா்.

கூட்டத்தில் திருச்சி பாலக்கரை பகுதிக் குழு சாா்பில் ரூ.1.50 லட்சம், மலைக்கோட்டை பகுதிக் குழு சாா்பில் ரூ.1.45 லட்சம், காட்டூா் பகுதிக் குழு சாா்பில் ரூ.84 ஆயிரம், தொழிற்சங்கம் சாா்பில் ரூ.51 ஆயிரம், பொன்மலை பகுதிக் குழு சாா்பில் ரூ.20 ஆயிரம், அந்தநல்லூா் பகுதிக் குழு சாா்பில் ரூ.16 ஆயிரம் என பல்வேறு பகுதிக் குழுக்கள், தொழிற்சங்கங்கள் சாா்பில் தோ்தல் நிதியை மாநிலச் செயலா் பெ.சண்முகத்திடம் வழங்கினா்.

திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

அம்மன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு: 20 போ் காயம்

பண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்

பாதுகாப்பு நிலைமை மோசமடைவதால் ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்

பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் மூதறிஞர் ராஜாஜி! குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு புகழாரம்

SCROLL FOR NEXT