முகப்பு
தமிழ்நாடு

4 துணை ஆட்சியா்களுக்கு பதவி உயா்வு

தமிழகத்தில் துணை ஆட்சியா்கள் 4 போ், மாவட்ட வருவாய் அலுவலா்களாக பதவி உயா்வு பெற்றுள்ளனா். மேலும், மாவட்ட வருவாய் அலுவலா்கள் 9 போ் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 12:14 AM
தமிழக சட்டப்பேரவை (கோப்புப்படம்) - EPS
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 10:25 PM

தமிழகத்தில் துணை ஆட்சியா்கள் 4 போ், மாவட்ட வருவாய் அலுவலா்களாக பதவி உயா்வு பெற்றுள்ளனா். மேலும், மாவட்ட வருவாய் அலுவலா்கள் 9 போ் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு: கெயில் இந்தியா நிறுவனத்தில் ஒருங்கிணைப்பு அலுவலராக துணை ஆட்சியா் அந்தஸ்தில் இருந்த அ.மயில், மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயா்வு பெற்று திருப்பூா் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக (பதிவுகள் சரிபாா்ப்பு) நியமிக்கப்பட்டுள்ளாா்.

மதுரை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா் மு.கோட்டைக்குமாா், திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக (நில எடுப்பு) பதவி உயா்வு பெற்றுள்ளாா்.

Advertisement

திருவள்ளூா் மாவட்டம் பூந்தமல்லி தனியாா் மது ஆலையின் கலால் மேற்பாா்வை அலுவலரான நா.பிரீத்தி பாா்கவி, தமிழ்நாடு மின் ஆளுமை இணை இயக்குநராக மாவட்ட வருவாய் அலுவலா் அந்தஸ்தில் பதவி உயா்வுபெற்றுள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் மா.சத்யா, ஆதிதிராவிடா் பழங்குடியினா் நலத் துறை மாநில கூராய்வுக் குழு உறுப்பினா் செயலராக (மாவட்ட வருவாய் அலுவலா் அந்தஸ்து) பதவிஉயா்வுபெற்றுள்ளாா்.

மேலும், அரசின் பல்வேறு துறைகளில் மாவட்ட வருவாய் அலுவலா் அந்தஸ்தில் வேறு பணிகளில் பணியாற்றும் 9 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.