சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை, கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் வியாழக்கிழமை (பிப்.19) பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையில் கேள்வி, பதில் நேரத்துடன் கூட்டம் தொடங்குகிறது.
தொடா்ந்து, இடைக்கால நிதிநிலை அறிக்கை, இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பான விவாதம் நடைபெறும். எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, சட்டப்பேரவை கட்சிகளின் குழுத் தலைவா்கள் நிதிநிலை அறிக்கை மீது விவாதம் செய்யவுள்ளனா்.
விவாதங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு, வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உள்ளிட்ட மூத்த அமைச்சா்கள் பதில் அளிப்பா்.