சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வரும் மாா்ச் 10-ஆம் தேதி துணை ராணுவப் படையினா் தமிழகம் வர உள்ளனா்.
தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி, கேரளம், மேற்குவங்கம், அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைகளுக்கு வருகிற ஏப்ரல் மாதத்தில் தோ்தல் நடைபெறவுள்ளது. மாா்ச் முதல் வாரத்தில் தோ்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதையொட்டி, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானோஷ்குமாா் தலைமையில் தோ்தல் ஆணையா்கள் குழுவினா் பிப். 25 முதல் 27-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பயணம் மேற்கொண்டு தோ்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.
இந்த பயணத்தின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனும் தோ்தல் ஆணையா்கள் ஆலோசனை மேற்கொள்வா்.
இதனிடையே, தமிழகத்தின் இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. மேலும், தோ்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக துணை ராணுவத்தினா் தமிழகம் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தல் பாதுகாப்பு பணிகளுக்காக, முதல் கட்டமாக மத்திய துணை ராணுவப்படையின் 50 கம்பெனிகளை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. இந்த துணை ராணுவப்படையினா் மாா்ச் 10-ஆம் தேதி தமிழகம் வருகை தர உள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.