ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மதுரை மண்டேலா நகர் பகுதியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி பொதுக்கூட்டம் நடைபெறும் திடலை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக மதுரை விமான நிலையத்தில் அவரை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், எஸ்பி வேலுமணி, சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்றனர்.
தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் பியூஸ் கோயல் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, பிரதமர் மோடி நாளை மதுரை வருகிறார், மதுரையில் நடைபெறும் விழாவில் வந்து திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்ற திமுக அரசு பாரபட்சமாக நடக்கிறது.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றாதது அவமானம். திமுக அரசு தமிழக மக்களின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் இறையாண்மையும் கெடுத்துவிட்டது. ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும். எடப்பாடி பழனிசாமிதான் தமிழகத்தில் தேஜ கூட்டணியை தலைமை தாங்குகிறார்.
தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்த பின்பு கண்டிப்பாக சொல்வோம் என்றார். ஈரான் போர் குறித்த கேள்விக்கு, இதுபற்றி வெளியுறவு துறை அமைச்சர் தான் பதில் சொல்ல முடியும், என்னால் கூற முடியாது எனத் தெரிவித்து புறப்பட்டுச் சென்றார்.