கரூர் நெரிசல் பலி துரதிர்ஷ்டவசமானது! உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தலைமை நீதிபதி பேசியது பற்றி...
கரூர் கூட்ட நெரிசல் பலி துரதிர்ஷ்டவசமானது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கூட்ட நெரிசலைத் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு இன்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
Advertisement
Advertisement
மனுதாரர் தரப்பில் வாதத்தை முன்வைகத்து பேசிய வழக்கறிஞர், கரூர் தவெக கூட்ட நெரிசல் மற்றும் பெங்களூரு ஆர்சிபி கூட்ட நெரிசல் ஆகிய சம்பவங்களை குறிப்பிட்டார்.
அப்போது பேசிய தலைமை நீதிபதி,
“கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமான சோகம். இதற்கு மேல் எதுவும் கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால், இதுபோன்ற நேரங்களில் மக்கள் வருவதைத் தடுப்பதும், தங்களுக்கான உரிமைகளை அவர்கள் பயன்படுத்துவதைத் தடுப்பதும் எப்படி என்பதுதான் சவால்.
கூட்ட மேலாண்மை மற்றும் பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி செயல்படுத்தும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கூட்ட மேலாண்மை, சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பது மத்திய - மாநில அரசுகளின் பொறுப்பின் கீழ் வருகின்றது. இதற்கான கொள்கையை உருவாக்க துறைசார் வல்லுநர்களே பொருத்தமானவர்கள். இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்தையும் மனுதாரர் நாடியுள்ளார். இந்த மனுவை இந்த கட்டத்திலேயே முடித்து வைப்பது பொருத்தமானது என்று நாங்கள் கருதுகிறோம்.
மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இதுதொடர்பாக மனு அளிக்கலாம். அவர்கள் மனுவை பொருத்தமானதாகக் கருதினால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.
The deaths in the Karur stampede are unfortunate! - Chief Justice of the Supreme Court
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.