மக்கள் நீதி மய்யம்
தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு பெறலாம்

மக்கள் நீதி மய்யம் சார்பில் வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

மக்கள் நீதி மய்யம் சார்பில் வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருப்ப மனுவை ரூ.50,000 செலுத்தி பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம், பேரவைத் தேர்தலில் அக்கட்சியிடம் இரட்டை இலக்க தொகுதிகளைக் கேட்டுப்பெற முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், தேர்தல் பணிகள் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளன. திமுக தலைமையில் இந்தியா கூட்டணியும், அதிமுக, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சித் தனித்தும் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில் சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் பொதுச்செயலர் அருணாச்சலம் உள்ளிட்ட ஐவர் கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் அக்கட்சி அமைத்துள்ளது.

The Makkal Needhi Maiam is inviting applications from party members aspiring to contest the 2026 Assembly elections in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீட் தேர்வை கைவிடக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

மங்காத்தா முன் நிற்க முடியவில்லை: மோகன். ஜி வேதனை!

பெண் ஊழியர்களின் 3ஆவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் விடுப்பு: உயர்நீதிமன்றம்

யு19 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 136 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து!

டாடா கேபிடல் 3வது காலாண்டு லாபம் 39% உயர்வு!

SCROLL FOR NEXT