சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கம்!
கருப்பை வாய் புற்றுநோய் (HPV) தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்.
இந்தியாவில் முதல்முறையாக சிறுமிகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் (HPV) தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(ஜன. 27) தொடக்கி வைத்தார்.
தமிழக அரசு சார்பில் 14 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளுக்கு இலவசமாக செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க ரூ.14,000 மதிப்புள்ள இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று, சென்னையில் நடைபெற்று வரும் உலக மகளிர் உச்சி மாநாட்டில் தொடக்கி வைத்தார்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கு ஏற்படும் கருப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் வகையில் 14- வயதுள்ள சிறுமிகளுக்கு ரூ.14,000 மதிப்புள்ள இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் சுமார் 3.39- லட்சம் சிறுமிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக ரூ.36- கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புற்றுநோய் பாதிப்புகளைத் தடுக்க, கடந்த நிதிநிலை அறிக்கையில் ஒரு வயது முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு ஹெச்பிவி எனப்படும் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்த ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனிடையே ஈரோடு, திருப்பத்தூா், கன்னியாகுமரி, ராணிப்பேட்டையில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு சோதனை முயற்சியில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
For the first time in India, Chief Minister Stalin today (Jan. 27) launched a scheme to provide free cervical cancer (HPV) vaccines to young girls.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.