முகப்பு
தமிழ்நாடு

கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம் புகட்டப்படும்: முதல்வர் ஸ்டாலின்

மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி முதல்வரின் பதிவு.

Updated On : 30 ஜனவரி, 2026 at 7:39 AM
மகாத்மா காந்தியின் திருஉருவப்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை.
பகிர்:

கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம் புகட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி அவரின் திருஉருவப்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”மதவெறியை மாய்ப்போம்! மகாத்மாவைப் போற்றுவோம்!

அமைதிவழியின் வலிமையை உலகுக்குக் காட்டி, ஒற்றுமையுணர்வு தழைக்கப் பாடுபட்டதால், கோட்சேவின் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி, ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் நிலைத்து வாழ்வார்!

மகாத்மாவை மறைத்து, நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம் புகட்டி, காந்தி பிறந்த மண்ணைக் காத்திடுவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Chief Minister Stalin has posted that a fitting lesson will be taught to Godse's successors.

முழு கட்டுரையைப் படிக்க →