தைப்பூசத் திருவிழாவையொட்டி, அரக்கோணம்-திருத்தணி இடையே ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தைப்பூசத் திருவிழாவையொட்டி பயணிகளின் வசதிக்காக, அரக்கோணம்-திருத்தணி இடையே ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, அரக்கோணத்தில் இருந்து மின்சார ரயில் காலை 10.20 மணிக்கு புறப்பட்டு 10.40 மணிக்கு திருத்தணி சென்றடைகிறது. மறுமாா்க்கத்தில் திருத்தணியில் இருந்து மின்சார ரயில் காலை 10.50 மணிக்கு புறப்பட்டு காலை 11.10 மணிக்கு அரக்கோணம் வந்தடைகிறது.
அதேபோல, அரக்கோணத்தில் இருந்து பிற்பகல் 2.48 மணிக்கு புறப்பட்டு மாலை 3.10 மணிக்கு திருத்தணி சென்றடையும். மறுமாா்க்கத்தில் திருத்தணியில் இருந்து மாலை 3.20 மணிக்கு புறப்பட்டு மாலை 3. 38 மணிக்கு அரக்கோணம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.