முதல்வர் பொது நிவாரண நிதிக்கு செட்டிநாடு குழுமம் ரூ. 3 கோடி நிதி!
முதல்வர் பொது நிவாரண நிதிக்கு செட்டிநாடு குழுமம் நன்கொடை அளித்துள்ளது குறித்து...
தமிழ்நாடு அரசின் மக்கள்நலத் திட்டங்களுக்கு ஆதரவாக, தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு (CMPRF) செட்டிநாடு குழுமம் ரூ. 3 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த நன்கொடையை செட்டிநாடு குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான முத்தையா ராமசாமி, சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யிடம் வழங்கினார்.
இந்த நன்கொடையை பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வின் மீதான செட்டிநாடு குழுமத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும், மக்கள்நலன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அதன் உறுதியான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.
Advertisement
Advertisement
செட்டிநாடு குழுமத்தின் இந்த நிதிப் பங்களிப்பை முதலமைச்சர் நன்றி பாராட்டியதுடன், மாநிலத்தின் மக்கள்நலத் திட்டங்களுக்கு அந்தக் குழுமம் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவையும் அங்கீகரித்தார்.
ஆறு தசாப்தங்களுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்ட செட்டிநாடு குழுமம், தனது பல்துறை வணிகங்கள் மற்றும் தேசக் கட்டமைப்பு, அறப்பணிகளுக்கான நீடித்த அர்ப்பணிப்பின் மூலம் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களித்து வருகிறது.
In support of the Tamil Nadu government's public welfare schemes, the Chettinad Group has donated ₹3 crore to the Tamil Nadu Chief Minister's Public Relief Fund (CMPRF).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.