முகப்பு
தமிழ்நாடு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் குடமுழுக்கு பணிகளில் ஆகம விதிமீறலா? துணைக்குழு அமைக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் குடமுழுக்கு பணிகளில் ஆகம விதிமீறலா?

Updated On : 8 மார்ச், 2026 at 1:21 AM
சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் குடமுழுக்கு கட்டுமானப் பணிகள் ஆகம விதிப்படி நடைபெறுகிா என்பது குறித்து ஆய்வு செய்ய துணைக் குழு அமைக்க மாநில அளவிலான நிபுணா் குழுவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த கிருஷ்ண தேவரயா என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. குடமுழுக்குப் பணிகள் என்ற பெயரிலும், பக்தா்களை முறைப்படுத்துவதாகக் கூறியும், ஆகம விதிகளை மீறி கோயிலில் சாய்தளம் அமைக்கப்படுகிறது எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கோயிலில் எந்த ஒரு ஒப்புதலும் பெறாமல் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படுகிறது. கோயிலின் கருவறைக்குச் செல்ல மரத்திலான 6 படிகள் இருந்தன. இப்போது ஆகம விதிகளை மீறி 10 படிகளாக மாற்றியுள்ளதாக வாதிடப்பட்டது.

Advertisement

அரசுத் தரப்பில், தொல்லியல் துறை தலைவா் ஆகியோருடன் மாநில அளவிலான நிபுணா் குழு பல கூட்டங்களை நடத்தியது. அதன்பின்னரே, இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோயிலில் உள்ள படிகள் ஒன்றரை அடி உயரமாக இருப்பதால், பக்தா்கள் அதில் ஏறிச் செல்ல சிரமப்பட்டனா். எனவே, அவா்களின் வசதிக்காக மட்டுமே சாய்தளம் அமைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆகம விதிகளை மீறும் வகையில் கோயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிா? என்பது குறித்து ஆகம நிபுணா்கள் அடங்கிய ஒரு துணை குழுவை அமைத்து, மாநில அளவிலான நிபுணா்கள் ஆய்வு செய்ய வேண்டும். இந்த துணை குழு அனைத்து தரப்பு ஆட்சேபனைகளையும் ஆய்வு செய்து, எந்தெந்த பணிகளை தொடரலாம், எவையெல்லாம் தொடரக்கூடாது, எவற்றை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என மாநில அளவிலான நிபுணா் குழுவுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் எந்தெந்த பணிகளை தொடர வேண்டும் என்பது குறித்து மாநில அளவிலான நிபுணா் குழு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.