முகப்பு
தமிழ்நாடு

கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்!

கரூர் துயரம் தொடர்பான விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் நாளை ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

Updated On : 9 மார்ச், 2026 at 7:38 AM
விஜய்(கோப்புப்படம்)
பகிர்:

கரூர் துயரம் தொடர்பான விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் நாளை ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

வேட்பாளர் நேர்காணலை நாளை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே தில்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய்யிடம் 2 முறை விசாரணை நடைபெற்றுள்ளது.

கரூரில் கடந்த ஆண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்.

மேலும் 110 போ் காயமடைந்தனா். இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். முன்னதாக இந்த வழக்கில் சிபிஐ, ஜனவரி 12ம் தேதி தமிழக வெற்றி கழகம் தலைவா் விஜய்யிடம் முதல் சுற்று விசாரணை மேற்கொண்டது.

அன்றைய தினம் ஆறு மணி நேரங்களுக்கும் மேலாக விஜய்யின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடா்ந்து ஜனவரி 19 அவரிடம் இரண்டாவது சுற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சுமார் ஐந்தரை மணி நேரங்களுக்கும் மேலாக விஜய்யிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அடுத்த கட்டமாக விஜய்க்கு சம்மன் கிடையாது என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் விஜய் நாளை மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

summary

For the investigation related to the Karur tragedy, TVK leader Vijay has been summoned by the CBI to appear tomorrow.

முழு கட்டுரையைப் படிக்க →