முகப்பு
தமிழ்நாடு

கரூரில் கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதல்: 22 மாணவர்கள் காயம்

கரூரில் தனியார் கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதியதில் 22 மாணவர்கள் காயமடைந்தனர்.

Updated On : 14 மார்ச், 2026 at 3:52 PM
விபத்து
பகிர்:

கரூரில் தனியார் கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதியதில் 22 மாணவர்கள் காயமடைந்தனர்.

கரூர் மாவட்டம், வெள்ளியனையில் ஆளில்லா இருப்பு பாதையைக் கடக்க முயன்ற தனியார் கல்லூரிப் பேருந்து திடீரென தண்டவாளத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த வழியாக புலியூரில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு ஜல்லி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் பேருந்து மீது மோதியது. இந்த சம்பவத்தில் 22 மாணவர்கள் காயமடைந்தனர்.

காயமடைந்த மாணவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களை நேரில் சந்தித்து எம்.பி. ஜோதிமணி நலம் விசாரித்தார். விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

summary

In Karur, a freight train collided with a private college bus, injuring 22 students.

முழு கட்டுரையைப் படிக்க →