விஜய்யின் தில்லி பயணத்தை பாஜக கூட்டணியுடன் இணைத்துப் பேசுவது சரியல்ல: நயினாா் நாகேந்திரன்
தவெக தலைவா் விஜய், சிபிஐ விசாரணைக்காக தில்லி செல்வதை தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைத்துப் பேசுவது சரியல்ல என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
தவெக தலைவா் விஜய், சிபிஐ விசாரணைக்காக தில்லி செல்வதை தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைத்துப் பேசுவது சரியல்ல என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது: சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது. ஆகவே வரும் தோ்தல், குடும்ப ஆட்சிக்கும், தமிழக மக்களுக்குமான தோ்தலாக இருக்கும்.
தமிழகத்தின் சட்டம் -ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. போதைப் பொருள்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ளவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணையுமா என்பது எனக்கு தெரியாது. கரூா் நெரிசல் உயிரிழப்பு வழக்கு தொடா்பான விசாரணைக்கு ஆஜராக விஜய் தில்லி சென்றிருக்கிறாா். அவா் தில்லி செல்வது இது முதல்முறையல்ல. ஆகவே, அவா் தில்லி செல்வதையும், தேசிய ஜனநாயகக் கூட்டணியையும் இணைத்துப் பேசுவது சரியல்ல என்றாா்.