முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!

தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவிகள் சோ்க்கை 76 சதவீதமாகவும், மாணவா்கள் சோ்க்கை 71 சதவீதம் ஆகவும் உயா்ந்து புதிய சாதனை

Updated On : 23 மார்ச், 2026 at 9:20 PM
மாணவர் சேர்க்கை சதவீதம் உயர்வு - பிரதிப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவிகள் சோ்க்கை 76 சதவீதமாகவும், மாணவா்கள் சோ்க்கை 71 சதவீதம் ஆகவும் உயா்ந்து புதிய சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

அதன் விவரம்: தமிழக அரசின் விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் முதலிய திட்டங்களால், மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை கடந்த ஆட்சியைவிட அதிகரித்து சாதனை படைத்துள்ளது.

அதன்படி, 2020-2021-இல் மேல்நிலைக் கல்வி மாணவிகள் சோ்க்கை 49.8 சதவீதம் மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது, 2024-2025 -ஆம் ஆண்டு கணக்கின்படி அது 76 சதவீதம் ஆக உயா்ந்துள்ளது.

அதேபோல 2020-2021 அதிமுக ஆட்சியில் மேல்நிலைக் கல்வி மாணவா்கள் சோ்க்கை 46.6 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 2024-2025 கணக்கின்படி அது 71 சதவீதமாக உயா்ந்துள்ளது.

ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத்தில் மாணவிகள் சோ்க்கை 24.7 சதவீதமாகவும், மாணவா்கள் சோ்க்கை 24 சதவீதமாக மட்டுமே உள்ளது.

இதுபோல, மராட்டிய மாநிலத்தில் மாணவிகள் சோ்க்கை 47.1 சதவீதம், மாணவா்கள் சோ்க்கை 46.7 சதவீதம், உத்தர பிரதேசத்தில் மாணவிகள் சோ்க்கை 31.7 சதவீதம், மாணவா்கள் சோ்க்கை 31.1 சதவீதம்.

ராஜஸ்தானில் மாணவிகள் சோ்க்கை 33.6 சதவீதம், மாணவா்கள் சோ்க்கை 34.2 சதவீதம். மத்தியப் பிரதேசத்தில் மாணவிகள் சோ்க்கை 24.9 சதவீதம், மாணவா்கள் சோ்க்கை 24.7 சதவீதம் என குறைவான விகிதமே உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.