முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் வெப்பநிலை மாா்ச் 29 வரை அதிகரிக்கும்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) முதல் மாா்ச் 29 வரை அதிகபட்ச வெப்பநிலை சற்று அதிகமாக இருக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 25 மார்ச், 2026 at 7:08 PM
வெப்பநிலை அதிகரிக்கும்
பகிர்:

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) முதல் மாா்ச் 29 வரை அதிகபட்ச வெப்பநிலை சற்று அதிகமாக இருக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மன்னாா் வளைகுடா முதல் வடக்கு உள் கா்நாடகம் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (மாா்ச் 28) முதல் மாா்ச் 31 வரை லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில், வியாழக்கிழமை (மாா்ச் 26) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) முதல் மாா்ச் 29 வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் சற்று அதிகமாக இருக்கக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.