முகப்பு
தமிழ்நாடு

அரபிக் கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்!

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு.

புயல் சின்னம் (கோப்புப்படம்) - கோப்புப்படம்
பகிர்:

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மே இரண்டாவது வாரத்தில் உருவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தின் கோடை மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

வழக்கமாக, மே மாதத்தில் அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் கேரளம் மற்றும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அதிக மழையைக் கொடுக்கும்.

இந்த நிலையில், மே இரண்டாவது வாரத்தில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைமா? புயலா வலுப்பெறுமா? என்பது குறித்து வரும் நாள்களில் தெரியவரும்.

இதனிடையே, சுமார் 0.9 கிமீ உயரத்தில், தெற்கு உள் கர்நாடகம் முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

இதன் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

summary

The India Meteorological Department has stated that a low-pressure area is likely to form in the southeast Arabian Sea.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.