முகப்பு
தமிழ்நாடு

புறநகர் சென்னையை மிரட்டும் கோடை வெய்யில்! இது வெறும் ஆரம்பம்தானா?

மைய சென்னையைவிட புறநகர் சென்னையில் கோடை வெப்பம் கடுமையாக நிலவுவது பற்றி..

கோடை வெய்யில் - file photo
பகிர்:

சென்னையின் மையப் பகுதிகளைவிடவும், அதன் எல்லை மற்றும் புறநகர் சென்னைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் வெப்பம் பதிவாகி மக்களை கடுந்துயரத்துக்கு ஆளாக்கியிருந்தது.

ஆனால், இது, மே மாதத்தின் கடுமையான வெய்யில் காலத்துக்கான ஆரம்பம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பது மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இந்த மாதத்தில் கடுமையான வெப்ப நாள்களும், வெப்பமான இரவு நேரங்களும் வரவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது. அதாவது இந்த மாதத்தில் சென்னையில் குறைந்தது 4 முதல் 5 வெப்ப அலை நாள்கள் இருக்கலாம். அதுபோல, இயல்பான அளவை விட சற்று கூடுதலாக மழை பெய்து, வெப்பத்தைக் குறைக்கும் வாய்ப்பும் உள்ளதாக, கடும் போட்டிக்குப் பிறகு ஆறுதல் பரிசு கிடைப்பது போல ஒரு கூடுதல் தகவலும் வெளியாகியிருக்கிறது.

Advertisement

summary

Summer heat threatens suburban Chennai! Is this just the beginning?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.