முகப்பு
தமிழ்நாடு

புறநகர் சென்னையை மிரட்டும் கோடை வெய்யில்! இது வெறும் ஆரம்பம்தானா?

மைய சென்னையைவிட புறநகர் சென்னையில் கோடை வெப்பம் கடுமையாக நிலவுவது பற்றி..

கோடை வெய்யில் - file photo
பகிர்:

சென்னையின் மையப் பகுதிகளைவிடவும், அதன் எல்லை மற்றும் புறநகர் சென்னைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் வெப்பம் பதிவாகி மக்களை கடுந்துயரத்துக்கு ஆளாக்கியிருந்தது.

ஆனால், இது, மே மாதத்தின் கடுமையான வெய்யில் காலத்துக்கான ஆரம்பம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பது மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இந்த மாதத்தில் கடுமையான வெப்ப நாள்களும், வெப்பமான இரவு நேரங்களும் வரவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது. அதாவது இந்த மாதத்தில் சென்னையில் குறைந்தது 4 முதல் 5 வெப்ப அலை நாள்கள் இருக்கலாம். அதுபோல, இயல்பான அளவை விட சற்று கூடுதலாக மழை பெய்து, வெப்பத்தைக் குறைக்கும் வாய்ப்பும் உள்ளதாக, கடும் போட்டிக்குப் பிறகு ஆறுதல் பரிசு கிடைப்பது போல ஒரு கூடுதல் தகவலும் வெளியாகியிருக்கிறது.

Advertisement

Advertisement

வரும் மாதத்தின் வெய்யில் பற்றிய ஒரு அறிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் வரும் மே மாதத்தில் இயல்பான அளவைவிட, வெப்பம் அதிகரித்துக் காணப்படும். கடற்கரை மாவட்டங்களில், திருவள்ளூர் முதல் ராமநாதபுரம் வரை இந்த மாதத்தில் 4 முதல் ஐந்து வெப்ப அலை நாள்கள் பதிவாகக் கூடும். சில பகுதிகளில் அதிகபட்சமாக 8 வெப்ப அலை நாள்கள் வரை பதிவாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 5ஆம் தேதி வரை கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரத்தில் வெப்ப அலை வீசும். வெப்ப அலை நாள்கள் என்றால், வெப்ப அளவு 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் மேல் பதிவாகும் என்று கூறப்படுகிறது.

summary

Summer heat threatens suburban Chennai! Is this just the beginning?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments