முகப்பு
தமிழ்நாடு

சுற்றுலாத் தலங்களில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - சீமான்

Updated On : 3 மே, 2026 at 2:56 AM
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
பகிர்:

சுற்றுலாத் தலங்களுக்கு வரும் மக்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் அமைந்துள்ள பா்கி அணை நீா்த்தேக்கத்தில் 29 போ் சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 போ் உயிரிழந்த செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். இதில், இந்திய பாதுகாப்புத் துறை வெடிமருந்து தொழிற்சாலையில் பணியாற்றி வந்த திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சோ்ந்த காமராஜ், அவரது மனைவி, மகன், உறவினா்கள் என தமிழகத்தைச் சோ்ந்த 5 பேரும் உயிரிழந்தது துயரத்தை அதிகரிக்கிறது.

நீரில் மூழ்கியபோதும் 4 வயது மகனை அணைத்தபடி மரணித்த தாயின் புகைப்படம் நெஞ்சை உலுக்குகிறது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்.

Advertisement

கோடைகாலம் மற்றும் பள்ளி விடுமுறை காலம் என்பதால் சுற்றுலாத் தலங்களில் மக்களின் கூட்டம் பன்மடங்கு அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் சீமான்.