விடுமுறைக்காலம்! வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி?
விடுமுறைக்காலத்தில் வெளியூர் செல்பவர்கள், வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது பற்றி..
கோடைக்காலம் வந்துவிட்டாலே விடுமுறைக் காலமும் சேர்ந்துகொள்ளும். இந்த நேரத்தில் அதிகமானோர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்வது வழக்கம். எனவே வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய சில வழிமுறைகள் அவசியம்.
முதலில் பொதுவாக வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அனைவரும் பொறுப்பும் அடங்கியிருக்கிறது.
அருகில்தானே செல்கிறோம் என்று நினைத்து சிலர் வீட்டின் கதவை மூடிவிட்டுச் சென்றுவிடுவார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் வீட்டை பூட்டுவது அவசியம்.
Advertisement
வீடு கட்டும்போதே, தற்போதைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வீட்டின் மதில் சுவர்களை யாரேனும் தொட்டால் அலாரம் அடிக்கும் வசதிகளை ஏற்படுத்தலாம்.
வீட்டில் ஆள்கள் இல்லை என்றாலும், ஆள்கள் இருப்பது போல காட்டுவது அவசியம். வெளியிலிருந்தே வீட்டின் வெளிப்புற விளக்குகளை அணைக்கும் வசதியை வைத்துக் கொள்ளுங்கள்.
குறைந்த செலவில் வீடுகளில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தி, செல்போன் மூலமாகவே வீட்டை கண்காணிக்கலாம்.
வீட்டில் கண்காணிப்புக் கேமரா அல்லது அலாரம் போன்றை பழுதானால் உடனடியாக அதனை சரி செய்து கொள்ளவும். சில வேலைகளில் அதுவும் திருடர்களின் சதியாக இருக்கலாம்.
வீட்டு வேலைக்காரர்களிடம் மற்றொரு சாவி இருக்கும்பட்சத்தில், நீங்கள் ஊரில் இல்லாத வேளையில் அவர்களிடம் மாற்று சாவியை வாங்கிக் கொள்வது நலம்.
வீட்டின் வாசலில், சாவியை மறைத்து வைப்பது எப்போதுமே நல்ல திட்டமல்ல.
இரவு நேரத்தில் ஆள்கள் இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக விளக்குகள் எரியாமல் இருப்பதைத் தடுக்க அக்கம் பக்கத்தினரிடம் சொல்லி மாலையில் விளக்குகளைப் போட்டு இரவில் அணைக்கக் கேட்டுக் கொள்ளலாம்.
வெளியில் செல்கிறோம் என்ற தகவலை முடிந்தவரை பக்கத்து வீட்டாருக்கு தெரிவித்துவிட்டுச் செல்ல வேண்டும். அப்போதுதான் இரவில் ஏதேனும் சப்தம் கேட்டாலும் அவர்கள் சென்று பார்க்க முடியும்.
வீட்டின் பாதுகாப்புக்காக நாய்களை வளர்ப்பது மிகவும் சிறப்பான வழிமுறை. அவற்றை நல்ல முறையில் பயிற்சி கொடுத்து வளர்த்தால் வீட்டுக்கு காவலே வேறு தேவையில்லை.