விஜய் வெற்றி : இப்போதான் களமே சூடு பிடித்துள்ளது - நடிகை ஜூலி
இனிதான் ஆட்டமே சூடுபிடிக்கப்போகிறது என தவெக வெற்றி குறித்து நடிகை ஜூலி கருத்து...
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அதிக தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் விஜய்யின் வெற்றி குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நடிகையும் திமுக ஆதரவாளருமான ஜூலி விடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
Advertisement
''எங்க ஜூலியை காணோம் என காணவில்லை போஸ்டர் ஒட்டுகிறார்கள். நான் எங்கும் செல்லவில்லை. நான் இங்குதான் இருக்கிறேன். உங்கள் வெற்றிக்காக எனது வாழ்த்துகள். அரசியலில் நிரந்தர வெற்றியும் கிடையாது; நிரந்தர தோல்வியும் கிடையாது. இது நன்கு தெரிந்த கட்சி திமுக.
நாங்கள் வெற்றி பெற்று உட்கார்ந்ததை விட தோல்வி அடைந்து எதிர்க்கட்சியாக அமர்ந்ததுதான் அதிகம். இதற்கெல்லாம் திமுக துவண்டுவிடாது. எதிர்க்கட்சியாக திமுக இருந்தால் அது எவ்வளவு ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியாது.
சண்டை செய்து பழகியவர்கள் நாங்கள். எதற்கும் தயாராக இருக்கிறோம். களத்திற்கு இப்போதானே வந்திருக்கிறீர்கள். இனிதான் ஆட்டமே சூடுபிடிக்கப்போகிறது'' எனப் பதிவிட்டுள்ளார்.