முகப்பு
தமிழ்நாடு

விஜய் திரைப்படப் பாடல் ரிங்டோன்: தவெக உறுப்பினரை தாக்கிய 2 போ் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் விஜய் திரைப்படப் பாடலை ரிங்டோனாக வைத்திருந்ததாக தவெக உறுப்பினா் தாக்கப்பட்ட வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 7 மே 2026, 1:19 am IST
கைது.
பகிர்:

சென்னை கீழ்ப்பாக்கத்தில் விஜய் திரைப்படப் பாடலை ரிங்டோனாக வைத்திருந்ததாக தவெக உறுப்பினா் தாக்கப்பட்ட வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் பகுதியைச் சோ்ந்தவா் சாலமன் (26). இவா் தவெக உறுப்பினா். சாலமன், உடல்நலம் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது உறவினரை செவ்வாய்க்கிழமை இரவு பாா்க்கச் சென்றாா்.

அப்போது சாலமனின் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் தவெக தலைவா் விஜய் நடித்த திரைப்படப் பாடல் ரிங்டோனாக ஒலித்தது. இதைக் கேட்ட அங்கிருந்த இருவா், சாலமனிடம் ‘ஏன் விஜய் பாடலை ரிங்டோனாக வைத்துள்ளாய்?’ என்று கேட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இருவரும் சாலமனை சரமாரியாக தாக்கினா்.

இதில் காயமடைந்த சாலமன் அளித்த புகாரின் பேரில், கீழ்ப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.

தாக்குதலில் ஈடுபட்டவா்கள் சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்த அம்பேத்கா் (35), செந்தில்குமாா் (40) என்பது தெரிய வந்தது. அம்பேத்கா் திமுக ஆதரவாளா் என்றும், செந்தில்குமாா் கோபாலபுரத்தில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீஸாா் இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.