பனையூரில் இன்று தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!
சென்னை பனையூரில் இன்று தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடுகிறது.
சென்னை பனையூரில் இன்று தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடுகிறது.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வரும்நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இன்று காலை 9 மணியளவில் தவெக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் கூடுகிறது.
அதுமட்டுமின்றி, பெரும்பான்மைக்காக ஆதரவுகோரி, தலா 2 இடங்களில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தவெக தலைவா் விஜய் கடிதம் எழுதியிருந்தார்.
Advertisement
இந்த நிலையில், விஜய்யின் ஆதரவு கடிதம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க இடதுசாரி கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் வெள்ளிக்கிழமை தனித்தனியாக ஆலோசனை நடத்துகின்றன.