பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!
தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு பற்றி...
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் கட்சியின் 232 வேட்பாளர்களையும் விஜய் சந்தித்துப் பேசி வருகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப். 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று(ஏப். 29) மாலை வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
Advertisement
Advertisement
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இன்று(ஏப். 30, வியாழக்கிழமை) தமிழகத்தில் 232 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள தவெக வேட்பாளர்களை விஜய் சந்தித்துப் பேசி வருகிறார்.
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இந்த கூட்டமானது நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையின்போது கவனமாக இருப்பது, வேட்பாளர்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக தலைவர் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Vijay Meets with TVK Candidates in Panaiyur
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.