பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!
தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு பற்றி...
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் கட்சியின் 232 வேட்பாளர்களையும் விஜய் சந்தித்துப் பேசி வருகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப். 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று(ஏப். 29) மாலை வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
Advertisement
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இன்று(ஏப். 30, வியாழக்கிழமை) தமிழகத்தில் 232 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள தவெக வேட்பாளர்களை விஜய் சந்தித்துப் பேசி வருகிறார்.
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இந்த கூட்டமானது நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையின்போது கவனமாக இருப்பது, வேட்பாளர்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக தலைவர் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.