பனையூரில் தவெக அலுவலகம் முன் தொண்டர்கள் கொண்டாட்டம்
சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 100 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகித்து வரும் நிலையில் அதன் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 100 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகித்து வரும் நிலையில் அதன் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 234 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில், 85.10 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் தவெக 100 தொகுதிகளுக்கு மேல் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதன் தலைவர் விஜய் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார். பிற்பகலுக்குப் பிறகு தொகுதிகளின் வெற்றி நிலவரம் தெரிய வந்துவிடும்.
Advertisement
Advertisement
இதையடுத்து சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகம் முன் கூடிய தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொண்டர்கள் தொடர்ந்து அங்கு குவிந்து வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தமிழ்நாடு முழுவதும் தவெக தொண்டர்கள் தற்போதே கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Celebrations erupt outside TVK headquarters in Panaiyur as supporters gather.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.