முகப்பு
தமிழ்நாடு

பனையூரில் தவெக அலுவலகம் முன் தொண்டர்கள் கொண்டாட்டம்

சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 100 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகித்து வரும் நிலையில் அதன் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பனையூரில் தவெக அலுவலகம்.
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 100 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகித்து வரும் நிலையில் அதன் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 234 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில், 85.10 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் தவெக 100 தொகுதிகளுக்கு மேல் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதன் தலைவர் விஜய் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் முன்னிலை உள்ளார். பிற்பகலுக்குப் பிறகு தொகுதிகளின் வெற்றி நிலவரம் தெரிய வந்துவிடும்.

Advertisement

இதையடுத்து சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகம் முன் கூடிய தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொண்டர்கள் தொடர்ந்து அங்கு குவிந்து வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தமிழ்நாட் முழுவதும் தவெக தொண்டர்கள் தற்போதே கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

summary

Celebrations erupt outside TVK headquarters in Panaiyur as supporters gather.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.