கடலூர்: ஆளுநருக்கு எதிராக தவெகவினர் போராட்டம்
விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கக்கோரி தவெகவினர் சாலை மறியல்
தமிழகத்தில் தவெக தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கக்கோரி தவெகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக, 108 இடங்களை வென்றபோதிலும், ஆட்சியமைப்பதற்கான 118 இடங்கள் இல்லை என ஆட்சியமைக்க விஜய்க்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.
இந்த நிலையில், விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதனிடையே, விஜய்க்கு அழைப்பு விடுக்காத ஆளுநருக்கு எதிராக கடலூரில் தவெகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்றுகூறி, நீதி வேண்டும் என்ற வாசகங்களுடன் கூடிய பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர்.
TVK cadres hold road blockade protest in Cuddalore against Governor Arlekar for not inviting Vijay to form government.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.