'வெற்றி தமிழகம்' என்ற பெயரில் தொலைநோக்குத் திட்டம்! ஆளுநர் உரை
5 ஆண்டுகளில் தமிழக வளர்ச்சிக்கான 'வெற்றி தமிழகம்' தொலைநோக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என ஆளுநர் உரை...
அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தின் வளர்ச்சிக்கு 'வெற்றி தமிழகம்' என்ற தொலைநோக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) தொடங்கியுள்ளது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மாநில ஆளுநா் ஆர்.வி. ஆா்லேகர் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்,
Advertisement
Advertisement
"அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு 'வெற்றி தமிழகம்' என்ற தொலைநோக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
அனைவரையும் உள்ளடக்கிய தொலைநோக்கு திட்டங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் வகுக்கப்படும். 2031ல் இந்தியாவின் முன்மாதிரியாக தமிழ்நாடு மாறும்.
தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்கப்படும். மாநிலத்தின் வளர்ச்சிக்காக புதிய தொழில் கொள்கை உருவாக்கப்படும்,
69% இடஒதுக்கீடைப் பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.
தமிழ்நாட்டிற்கான உரிய நிதியைப் பெற மத்திய அரசை வலியுறுத்தி பேரவையிலி தீர்மானம் நிறைவேற்றப்படும்.
இந்து சமய அறநிலையத் துறையில் கட்டமைப்புகள் சீரமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் புழக்கம் அதிகாித்துள்ளது. அதை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தவெக அரசு பொறுப்பேற்றதும் 717 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன
மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது அரசின் கடமை. பேரவை உறுப்பினர்கள் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்" என்றார்.