ஆளுநரின் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு சம்மன்: சு. வெங்கடேசன் எம்.பி. எச்சரிக்கை
மதுரையில் ஆளுநர் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு அழைப்பாணை எச்சரிக்கை குறித்து...
மதுரையில் ஆளுநர் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்படும் என சு. வெங்கடேசன் எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை வைகை ஆற்றைச் சீரமைக்கவிட்டால், ஆளுநர் மாளிகையே களமிறங்கும் எனக் கூறி, மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மதுரை மாநகராட்சி ஆணையர், மாவட்ட அதிகாரிகளுடன் ஆளுநர் ஆர்லேகர் ஆய்வு கூட்டத்தையும் நடத்தினார்.
ஆளுநரின் இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும், அமைச்சர்கள், வன்னி அரசு மற்றும் நிர்மல் குமாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சட்டத்தை மீறி ஆளுநர் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஆளுநர் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்படும் என்றும் சு. வெங்கடேசன் எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Su. Venkatesan MP warns that summons will be issued to officials participating in review meetings conducted by the Governor RV Arlekar in Madurai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.