இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன்
விஜய்யை சந்தித்த பிறகு திருமாவளவன் செய்தியாளர்களுடன் பேசியது குறித்து...
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் விஜய் சந்திக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தன் வேண்டுகோளை ஏற்று எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதாக விஜய் கூறியதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுடன் திருமாவளவன் பேசியதாவது:
Advertisement
Advertisement
''முதல்வர் விஜய்யின் அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சி பாராட்டுக்குரியது. பாஜக அங்கம் வகித்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவை விஜய் கோரவில்லை.
மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்த விஜய்க்கு அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையை பரிசாக வழங்கினோம்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவே உண்மையான அதிமுகவாக கருதுகிறோம். பழனிசாமியின் அணியில்தான் கொறடா உள்ளார்.
சி.வி. சண்முகம் தலைமையில் அமைந்துள்ள அதிமுக, எடப்பாடி அணிக்கு எதிராக செயல்பட்டால் வாக்குகள் செல்லுமா? பொறுப்பு நீடிக்குமா? என்பதை பேரவைத் தலைவர் முடிவு செய்வார்.
கட்சியில் இருந்து குழுவாக தனித்து இயங்கினாலும் கூட அவர்களுக்கான அங்கீகாரம் பேரவைத் தலைவரால் அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுகிறது.
தவெகவின் செய்தித்தொடர்பாளர் என்ற வகையில் ஜோசியர் ரத்தன் பண்டிட்டுக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருக்கலாம்'' என்று கருதுகிறேன் என திருமாவளவன் பேசினார்.
CM C joseph vijay should meet Edappadi Palaniswami Thirumavalavan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.