தமிழ்நாட்டில் 76% மக்கள் திமுகவுக்கு எதிராக தீர்க்கமான முடிவு: முதல்வர் விஜய்
தமிழ்நாட்டில் திமுக தேவையில்லை என 76% மக்கள் தீர்க்கமான முடிவெடுத்ததாக முதல்வர் விஜய் பேச்சு
தமிழ்நாட்டில் திமுக தேவையில்லை என 76% மக்கள் தீர்க்கமான முடிவெடுத்ததாக முதல்வர் சி. ஜோசப் விஜய் பேசியுள்ளார்.
திமுகவை தவெக அதிகளவில் வாக்கு சதவிகிதம் பெற்றதாகக் கூறி, முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "இவை எல்லாம் நாம் சொல்லும் கணக்கன்று. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கணக்கு. இது தெரிந்தும், புள்ளிவிவரப் புலி திமுக எடுத்து வைக்கும் வாதத்தை என்னவென்று சொல்ல?
இது மட்டுமா? நம் த.வெ.க.வை 3 கோடியே 21 லட்சம் (இதில் சில லட்சம் வாக்குகள் அதிகமாக சொல்லப்பட்டுள்ளது) மக்கள் நிராகரித்ததாகத் திமுக சார்பாகக் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால், திமுக மட்டும் தனியாக வாங்கிய வாக்குகளின்படி 3 கோடியே 68 லட்சம் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிதான் திமுக.
Advertisement
சதவிகிதக் கணக்குப்படி பார்த்தாலும் தவெக 35 சதவிகிதம் எனில், திமுக 24 சதவிகிதம்தான். அதன்படி பார்த்தாலும்கூட, தமிழ்நாட்டின் 76 சதவிகித மக்கள் திமுகவே தங்களுக்குத் தேவை இல்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக அக்கட்சியை நிராகரித்துள்ளனர்.
இப்படி தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, 35 சதவிகித மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சியைப் பார்த்து ஏளனமாகப் பேசுவதன் காரணம் என்ன என்பதை மக்கள் அறியாதவர்களா என்ன?" என்று குறிப்பிட்டுள்ளார்.