கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்!
கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காவல் துறையில் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதன், கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
கடந்த திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர், உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்தவர் டேவிட்சன் தேவாசீர்வாதம்.
உளவுத் துறை முன்னாள் ஐ.ஜி. ஆக இருந்த செந்தில்வேலன், காவல் துறை அகாதெமியின் கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காவல் துறை அகாதெமியின் டி.ஜி.பி. ஆக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.