முகப்பு
தமிழ்நாடு

தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கும்! வானிலை மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளது பற்றி...

கோப்புப்படம் - ENS
பகிர்:

தென்மேற்கு பருவமழையானது அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெய்யில் வாட்டி வதைத்த நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

Advertisement

அதன்படி, தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வழக்கத்தைவிட 5 நாள்களுக்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று (மே 15) விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

ஒருசில மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

summary

The Southwest Monsoon will begin within the next 24 hours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.