பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம்: ஆய்வு நடத்த உத்தரவு
பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க ஆய்வு நடத்த உத்தரவு பிறப்பிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், ஆய்வுகளை நடத்த மதுவிலக்கு மற்றும் கலால் துறை ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதுவிலக்கு மற்றும் கலால்துறை ஆணையர், துறைசார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே கல்வி நிலையங்களில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே உள்ள கடைகளில், சந்தேக இடங்களை அடிக்கடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement
டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் வளாகங்களை ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வுகளை நடத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க தனி அலகுகள் உருவாக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்த நிலையில், கலால் துறை இந்த அறிவுறுத்தலை வெளியிட்டிருக்கிறது.