முகப்பு
தமிழ்நாடு

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: குற்றவாளிகள் விடுதலை ரத்து - உச்ச நீதிமன்றம்

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

டாக்டர் சுப்பையா கொலை வழக்கு
பகிர்:

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்வதாகவும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம், குற்றவாளிகளுக்கான தண்டனையை ரத்து செய்தது மிகப்பெரிய தவறு என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. விசாரணை நீதிமன்ற உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது சரியல்ல, விசாரணை நீதிமன்றம் விசாரித்து அளித்த தீர்ப்பை முறையாக ஆராயாமல் உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும், வழக்கில் பொன்னுசாமி, மேரி புஷ்பம் மீதான தண்டனையை மட்டும் நிறுத்திவைப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2013ஆம் ஆண்டு சென்னை ஆர்.ஏ. புரத்தில் சாலையோரம் நடந்து சென்றபோது, மருத்துவர் சுப்பையா படுகொலை செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.