இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
குடும்பத் தலைவிகள்தான் நாட்டை கட்டமைப்பவர்கள்; அவர்களது பணிக்கு மாதம் ரூ.30 ஆயிரம் மதிப்பு என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
குடும்பத் தலைவிகள்தான் நாட்டை கட்டமைப்பவர்கள்; அவர்களது பணிக்கு மாதம் ரூ.30 ஆயிரம் மதிப்பு என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
ஒவ்வொரு குடும்பங்களுக்குள்ளும் சமூகத்துக்குள்ளும் வேலைக்குச் செல்லாத குடும்பத் தலைவிகள் மேற்கொள்ளும் பணியானது, இல்லத்தரசிகள் என்ற பொறுப்பில் இருப்பவர்கள் நாட்டைக் கட்டமைப்பவர்கள் என்ற அந்தஸ்தைப் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது.
சாலை விபத்துகளில் உயிரிழக்கும் இல்லத்தரசிகளுக்கான இழப்பீட்டைத் தீர்மானிக்கும்போது, ஊதியம் பெறாமல், அவர்கள் மேற்கொள்ளும் வீட்டு வேலைகளின் மதிப்பை மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.30,000 என கணக்கிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
Advertisement
Advertisement