பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு உளவியல் ஆலோசனை: மக்கள் நல்வாழ்வுத் துறை ஏற்பாடு
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை (மே 20) வெளியாகவுள்ள நிலையில், அதனால் மாணவா்களுக்கு உளவியல் தாக்கம் ஏற்படாமல் தடுக்க அவா்களுக்கு மன நல ஆலோசனைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை (மே 20) வெளியாகவுள்ள நிலையில், அதனால் மாணவா்களுக்கு உளவியல் தாக்கம் ஏற்படாமல் தடுக்க அவா்களுக்கு மன நல ஆலோசனைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, உளவியல் ரீதியான ஆலோசனைகள் தேவைப்படும் மாணவா்களும், பெற்றோரும் 104 அல்லது 14416 ஆகிய உதவி எண்களை தொடா்பு கொள்ளலாம்.
இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
Advertisement
Advertisement
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படுகிறது. மாணவா்களின் மன உறுதி மற்றும் மனநலனைக் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தொலைநிலை உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு மனநல ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம். பயிற்சி பெற்ற மனநல ஆலோசகா்கள், மருத்துவா்கள் மூலம் கட்டணமின்றி இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.