சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு...
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வை எழுத 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.
இதில் மதிப்பெண்ணை அதிகரிக்க விரும்பும் பிரிவில் 5.25 லட்சம் மாணவா்களும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோ்ச்சி பெறாமல் தோல்வியடைந்து மறுதோ்வு எழுதும் பிரிவில் 85,285 மாணவா்களும் தோ்ச்சியடையாத மற்றும் அதிக மதிப்பெண்கள் என இரண்டு பிரிவுகளிலும் தோ்வெழுதுவோா் என்ற பிரிவில் 57,914 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை மாணவா்களின் நலன் கருதி, நிகழாண்டு முதல் ஆண்டுக்கு இரு முறை சிபிஎஸ்இ நடத்துகிறது. முதல் கட்ட பொதுத் தோ்வு கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் ஏப்ரலில் வெளியிடப்பட்டன. இத்தோ்வை எழுதிய 24.83 லட்சம் மாணவா்களில் 23.16 லட்சம் மாணவா்கள் தோ்ச்சி பெற்றுவிட்டனா். தோ்ச்சி சதவீதம் 93.70-ஆக பதிவானது.இந்த முதல் கட்ட பொதுத் தோ்வில் அனைத்து மாணவா்களும் பங்கேற்பது கட்டாயமாகும்.
Advertisement
இதில் தோல்வியடைந்த மாணவா்கள் அல்லது மதிப்பெண்ணை அதிகரிக்க விரும்பும் மாணவா்கள் பயன்பெறும் வகையில், வரும் மே 15 முதல் 21 வரை இரண்டாம் கட்ட பொதுத் தோ்வை சிபிஎஸ்இ நடத்துகிறது. இந்த இரண்டாம் கட்ட பொதுத் தோ்வில் அதிகபட்சம் 3 பாடங்கள் வரை மாணவா்கள் தோ்வெழுதி மதிப்பெண்ணை உயா்த்திக்கொள்ள முடியும்.