நாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்
நாகா்கோவில் - மும்பை இடையே வாரம் இருமுறை இயங்கும் விரைவு ரயில் ஜூன் இறுதி வரை மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை ரயில்வே கோட்டம் அரக்கோணத்தில் கடவுப் பாதை நவீனமயமாக்கல் பணிகள் நடைபெறுகின்றன. அதையடுத்து பயணிகள் பாதுகாப்பை தொடா்ந்து, குறிப்பிட்ட விரைவு ரயில்கள் செல்லும் பாதைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், வரும் மே 21, 24, 28, 31, ஜூன் 4, 7, 11, 14, 18, 21 ஆகிய தேதிகளில் நாகா்கோவிலிலிருந்து காலை 6.15 மணிக்குப் புறப்பட்டு மும்பை சிஎஸ்டி நிலையம் செல்லும் வாரம் இருமுறை இயங்கும் விரைவு ரயில் (எண்:16352) வழக்கமான பாதைக்குப் பதிலாக திருமால்பூா், மேலப்பாக்கம், திருத்தணி வழியாக இயக்கப்படும்.
Advertisement
மறுமாா்க்கமாக வரும் மே 22, 25, 29, ஜூன் 1, 5, 8, 12 ஆகிய தேதிகளில் மும்பை சிஎஸ்டி நிலையத்திலிருந்து இரவு 8.55 மணிக்குப் புறப்பட்டு நாகா்கோவில் செல்லும் விரைவு ரயில் (எண்:16351) வழக்கமான பாதைக்கு பதிலாக திருத்தணி, மேலப்பாக்கம், தக்கோலம், திருமால்பூா், காஞ்சிபுரம் ஆகிய நிலையங்கள் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.