முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு!
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதியப்பட்டது பற்றி...
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை மாநகரக் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தரப்பினருக்கும், தவெக வேட்பாளர் அசோக் சினோரா தரப்பினருக்கும் வாக்குப் பதிவு நாளான மே 4 ஆம் தேதி தகராறு ஏற்பட்டது.
இதில், அசோக் சினோரா மற்றும் வழக்கறிஞர் விஜய்குமாரை முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தாக்கியதாக சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த புகாரின் அடிப்படையில் சேகர்பாபு மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை துறைமுகம் தொகுதியில் அசோக் சினோராவை 11,750 வாக்குகள் வித்தியாசத்தில் சேகர் பாபு தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.