முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரம்... சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இன்றைய வானிலை நிலவரம் பற்றி...

சென்னை - ENS
பகிர்:

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இன்று மாலை 4 மணி வரை) 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இதுபற்றி வெளியிட்டுள்ள தகவலில்,

"தமிழகத்தின் ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும்

Advertisement

Advertisement

செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக வெய்யில் வாட்டி வதைத்த நிலையில் இன்று பலத்த காற்று வீசியது. வெப்பம் குறைந்து மிதமான சூழல் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

summary

rain alert for 12 districts including chennai for next 3 hours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.