சென்னையில் மேகமூட்டம் ஏன்? வானிலை மையம் விளக்கம்
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கக் காரணம் ஏன் என்பது குறித்து வானிலை மையம் விளக்கம் கொடுத்துள்ளது.
கடந்த ஒரு சில நாள்களாக கோடை வெப்பம் தகித்து வந்த நிலையில், சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
மிக ரம்மியமான காலநிலை நிலவுவதால், சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
வழக்கமாக காலை 7 மணிக்கெல்லாம் சூளீரென்று உதயமாகிவிடும் சூரியன், இன்று சற்று ஓய்வெடுத்துக் கொண்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது,
Advertisement
Advertisement
சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
இதற்குக் காரணம் சென்னையில் இன்று காலை முதலே கடல் காற்று மணிக்கு 25 கிலோ மீட்டர் முதல் 30 கி.மீ. வேகத்தில் வீசத் தொடங்கிவிட்டது.
வழக்கமான காற்றுக்கு பதிலாக வங்கக் கடலில் இருந்து குளிர்ந்த, ஈரப்பதமான காற்று சென்னை நோக்கி வீசியது சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி மற்றும் ஆந்திரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையே சென்னையின் மேகமூட்டத்துக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.