சென்னையில் மேகமூட்டம் ஏன்? வானிலை மையம் விளக்கம்
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கக் காரணம் ஏன் என்பது குறித்து வானிலை மையம் விளக்கம் கொடுத்துள்ளது.
கடந்த ஒரு சில நாள்களாக கோடை வெப்பம் தகித்து வந்த நிலையில், சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
மிக ரம்மியமான காலநிலை நிலவுவதால், சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
வழக்கமாக காலை 7 மணிக்கெல்லாம் சூளீரென்று உதயமாகிவிடும் சூரியன், இன்று சற்று ஓய்வெடுத்துக் கொண்டுள்ளது. இதனால் வெளிவேலைகளைத் தவிர்த்து வந்த மக்கள், இன்று நிம்மதியாக வெளியே கிளம்பியிருக்கிறார்கள்.
Advertisement
Advertisement
வானிலை மாற்றம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது,
சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. காற்றழுத்த சுழற்சி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இடையேயான தொடர்பே, இன்றைய வானிலை மாற்றத்துக்குக் காரணம். இதனால், சென்னையில் இன்று வெப்பநிலை ஓரளவுக்குக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம் சென்னையில் இன்று காலை முதலே கடல் காற்று மணிக்கு 25 கிலோ மீட்டர் முதல் 30 கி.மீ. வேகத்தில் வீசத் தொடங்கிவிட்டது.
வழக்கமாக வடமேற்கு திசையில் இருந்து வீசும் வறண்ட காற்றுக்கு பதிலாக வங்கக் கடலில் இருந்து குளிர்ந்த, ஈரப்பதமான காற்று சென்னை நோக்கி வீசியதுதான், சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி மற்றும் ஆந்திரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையே சென்னையின் மேகமூட்டத்துக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சென்னை உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது ஒருசில தூறல்கள் விழுந்துள்ளது. இதே நிலை இன்று நீடிக்கும் என்றும் தெரிவக்கப்பட்டுள்ளது.
The Meteorological Department has explained why the sky is cloudy in Chennai.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.