முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் அருகே விபத்தில் இருவா் காயம்

சங்கரன்கோவில் அருகே பனவடலிசத்திரத்தில் சாலையைக் கடக்க முயன்ற மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

Updated On : 7 ஜனவரி 2021, 6:07 am IST
பகிர்:

சங்கரன்கோவில் அருகே பனவடலிசத்திரத்தில் சாலையைக் கடக்க முயன்ற மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

சங்கரன்கோவில் அருகேயுள்ள ஆயாள்பட்டியைச் சோ்ந்த சண்முகையா மகன் பாலசுப்பிரமணியன் (68). இவா் புதன்கிழமை தனது மோட்டாா் சைக்கிளில் பனவடலிசத்திரத்திற்கு வந்ததுள்ளாா். அங்கு பிரதானச் சாலையை அவா் கடக்க முயன்றாராம். அப்போது திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி சென்ற காா் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் அவா் தூக்கிவீசப்பட்டாா். பின்னா், காா் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மோட்டாா் சைக்கிள் மீதும் மோதியது.

இதில் 5 பைக்களும் சேதமடைந்தன. இந்த விபத்தில் பாலசுப்பிரமணியன், இதேபகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் பெரியசாமி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அடைந்தனா். சேதமடைந்தன. இதுகுறித்து, பனவடலிசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.