சுரண்டை பதியில் நாளை தா்மபெருந்திருவிழா
சுரண்டை, ஏப். 26: சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் சித்திரை மாத தா்மபெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதையொட்டி ஞாயிறு காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப்பணிவிடை, திருஏடு வாசிப்பும், 11 மணிக்கு திருக்கல்யாணமும்,
12 மணிக்கு உச்சிபடிப்பு மற்றும் உகப்பெருக்கு பணிவிடையும் நடைபெறுகிறது.
Advertisement
இதையடுத்து, பிற்பகல் 1 மணிக்கு சுரண்டை ஸ்ரீதிருமலைகுமாராசாமி ஆலயத்தில் அன்னதா்மம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை சுரண்டை சுற்றுவட்டார அய்யாவின் அன்புகொடி மக்கள் சபையினா் செய்துள்ளனா்.